அத்தியாயம் 2 – மெட்டி இருக்கிறதா?
நானும் கோபாலனும் பேசிக்கொண்டிருந்தது கேட்டிருப்பாளோ, என்று நான் கவலையாக இருந்தேன்.
அவள் கண்கள், ஏதோ கவலையுடன், ரயில் ஜன்னலிலிருந்து, அழகிய பசுமையான காட்சியமைப்பை நோக்கியே இருந்தது.
கற்பனைகளை வளர்க்கும் முன்னால், எச்சரிக்கையாக, இந்த பெண்ணுக்கு, கல்யாணம் ஆயிருக்குமோ என்று யோசித்தேன்.
திடிரென்று, என் மனதில் ஒரு அளவு கடந்த சோகம், என்னை அறியாமல்.
அவள் நெற்றியின் நடுவில் குங்குமம் இல்லை. மெதுவாக அவள் பாதவிரல்களில் மெட்டி இருக்கிறதா எனப் பார்த்தேன்.
அப்போதுதான், மனம் ஒரு சமாதானத்தை கண்டது — இவள் கல்யாணம் ஆகாத பெண் தான் என்று முடிவுக்கு வந்துவிட்டது.
கோபாலன் பிசினஸ் விஷயமாக, சில விவரங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான்.
அதெல்லாம் நான் கொஞ்சம் கூட கவனம் செலுத்த முடியவில்லை.
என் கற்பனை கவனம் எல்லாம் எவள் பேரையாவது தெரிஞ்சுக்கணும் என்று ஆவலுடன் இருந்தது.
மனதில் ஆயிரம் கற்பனைகள் அலை அலையாக எழுந்து, என்னை முற்றிலும் ஆட்கொண்டன.
No comments:
Post a Comment