Sunday, August 31, 2025

அத்தியாயம் 4 - சுந்தரனின் நாடி குறிப்பு - அகத்திய முனிவர் அருள் வாக்கு

அத்தியாயம் 4 - சுந்தரனின் நாடி குறிப்பு  – அகத்திய முனிவர் அருள் வாக்கு



பத்து வருடங்களுக்கு முன்னால், கல்யாணத்துக்கு பரிகாரம் தேடி, அம்மா மீனாக்ஷி, சுந்தரனின் நாடி குறிப்பு தேடி கஞ்சனூருக்கு போகிறுந்தாள். 

அந்த  நாடி குறிப்பில் இருந்த சில விஷயங்கள் அப்போாது அவனுக்கு ஞாபகம் வந்தனே.

**"சுந்தரா…
உன் வாழ்க்கையின் நீண்ட பாலைவனத்தில்
ஒருநாள் மழை பெய்யும்.
அந்த மழை —
‘ஷ்யாமளா’ என்று அழைக்கப்படும்
ஒரு உயிரின் பாசமாகும்.

அவள் உள்ளம் ஆழமான கடல்.
அதன் அடியில், காயங்களின் கற்கள்
யுகங்களாக படிந்துள்ளன.

இவள் முந்தைய பிறப்பில்,

வெளி நாட்டிலிருந்து வந்தவனால் நேசிக்கப்பட்டு,
கருவுற்ற நிலையில்
தனிமையின் நிழலில் விடப்பட்டாள்.

அதன் சுவடு இன்னும் அவள் நெஞ்சில் எரிகிறது.

ஆனால் அவள் நேசிக்கும் போது,
அது கண்ணன்-ஷ்யாமளையின் ஆழ்ந்த ஆனந்தம் போல
உன் உயிரை முழுவதும் ஆட்கொள்ளும்.

அவள் ஜாதகத்தில் —
சுக்ரன் உச்சத்தில்;
மிருகசீரிஷம் நட்சத்திரம்.
குரு பின்செலுத்தும்  நிலையில்.

அவளை அணுகும் போது,
உன் ஆசைகளால் அல்ல,
உன் உயிரின் பரிசுத்தத்தால் தொடு.

ஏனெனில் அவள்,
உன் ஆன்மாவை மீண்டும் பிறக்கச் செய்யும்
ஒரே பெண்."**

No comments:

Post a Comment

List

Blog Archive

Lines From 'One Night in Provence' - 30 MArch 2026

They walked slowly and separately along the gravel paths. The air smelled sweeter in the garden. It was warmer, too. In fact, now that they ...